Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்னையும் சுட்டுடுங்க: போலீசிடம் கதறிய 7 மாத கர்ப்பிணி மனைவி

டிசம்பர் 07, 2019 08:13

ஐதராபாத்: என் கணவரை சுட்டுக்கொன்ற இடத்திலேயே என்னையும் கொலை செய்து விடுங்கள் என்று சின்னகேசவலுவின் மனைவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான சின்ன கேசவலு என்பவரின் மனைவி காவல் துறையினரிடம் ஒரு முறையீட்டை முன்வைத்துள்ளார்.

“எங்கள் இருவருக்கும் திருமணமாகி 1 வருடமே ஆகியுள்ளது. தற்போது நான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன். என் கணவரை சுட்டுக்கொன்ற அதே இடத்திலேயே என்னையும் சுட்டுக்கொலை செய்து விடுங்கள்” என்று அழுது புலம்பியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு சின்னகேசவலுவின் தாயார் என் மகனே எரித்து கொன்று விடுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்